எஸ்.தாணு, ஆஸ்கர் ரவிச்சந்திரன்... இந்த இரு பெயர்களுடன் தயாநிதி அழகி‌ரியின் பெயரும் சேர்ந்திருக்கிறது. அ‌ஜித்தின் 50வது படத்தை தயா‌ரிக்கப் போவது யார் என்ற கேள்விக்கான சாய்ஸ் இவர்கள்.



தயாநிதி அழகி‌ரியின் கிளவுட் நைன் மூவிஸ் தற்போது தமிழ் படம் என்ற படத்தை தயா‌ரித்து வருகிறது. இதையடுத்து அ‌ஜித்தின் ஐம்பதாவது படத்தையும் கிளவுட் நைன் தயா‌ரிக்கிறதாம்.

அ‌ஜித் தற்போது நடித்துவரும் அசல் அவரது 49வது படம். ஐம்பதாவது படத்தை தயா‌ரிக்க முன்னணி தயா‌ரிப்பாளர்கள் முட்டி மோதுகிறார்கள். அதில் முதலில் இருப்பவர் தாணு.

ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் அ‌ஜித்தின் ஐம்பதாவது படத்தை தயா‌ரிக்கும் விருப்பம் இருக்கிறது. தற்போது தயாநிதியின் பெயரும் அடிபடுவதால், அவருக்கே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் இன்டஸ்ட்‌ரியில்.

ஆதவனுக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட கே.எஸ்.ரவிக்குமார் அ‌ஜித்தின் ஐம்பதாவது படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளது. அசல் படத்துக்காக வெளிநாடு சென்றிருக்கும் அ‌ஜித் திரும்பி வந்தால் அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கலாம்.


Fans of the ultimate star Ajith are rejoicing at the hint of a recent development. Sources revealed that the actor would now join hands with Dhayanidhi Alagiri, the son of Union Minister MK Alagiri for the film that would mark a golden jubilee in his career. The movie will be produced under Dhayanidhi’s home banner Cloud Nine Movies.

According to the buzz, there are three directors contending for helming the film. The frontrunner is KS Ravikumar, who has given a huge hit with Ajith in Varalaaru. Also Venkat Prabhu with whom Ajith shares great vibes and Vishnuvardhan who has given a blockbuster with Ajith (Billa) and has narrated a one-liner script to has narrated a one-liner script to the star, are being considered for the director’s chair.

Ajith is now busy working on his 49th film Asal with Saran under Sivaji Productions banner. An official announcement regarding the new film is expected before Ajith leaves for Hungary in the third week of September to complete his next schedule of Asal.

- Deccan Chronicle 04.09.09


நெருங்கிய நண்பர்கள் வீட்டு விஷேசம் என்றால் முதல் ஆளாக வந்து விடுவார் நம்ம தல.. விஷேசத்துக்கு வரும் இதர நண்பர்களை அவரே வரவேற்று, உபசரித்து, பந்தி பரிமாறி அனுப்புவதில் நெறைய ரிலாக்ஸ் கெடைக்கிரதாம்.
இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடவில்லை என்றாலும் காத்துவாக்கில் பல காதுகளை சென்றடைந்து வருகிறது இந்த செய்தி.



அஜித் நடிக்கும் ‘அசல்’ படத்தில் சிம்பு கௌரவவேடத்தில் நடிக்கப்போகிறார் என கூறப்பட்டது. ‘அசல்’ தயாரிப்பு தரப்பில் மறுக்கப்பட்டு வந்த இந்த செய்தியில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. அதாவது ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போடப்போகிறாராம் சிம்பு. இப்பாடலை சிம்புவே தனது சொந்தக்குரலில் பாடப்போவதாகவும் சொல்லப்படுகிறது.

அடிப்படையில் அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு. அவரது படங்களில் ஒரு சீனிலாவது அஜித் புகழ் பரப்பாமல் இருந்ததில்லை. அந்த வகையில் சிம்புவுக்குள் ரொம்ப நாளாகவே ‘தல’ படத்தில் ஒரு சீனிலாவது தலை காட்டவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். தனது எண்ணத்தை அஜித்திடம் நேரடியாகவே ஒருமுறை சொல்ல, ‘அசலி’ல் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம் அஜித்.

மலேசியாவில் படப்பிடிப்புகள் முடிந்ததும் சிம்பு நடனத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கப்போகிறார்களாம்.