‘அன்னை இல்லம்’ சொல்லும்போதே ரசிகர்களின் அதுவும் குறிப்பாக சிவாஜியின் ரசிகர்களின் மனதுக்குள் சுகம் சேர்க்கும் வார்த்தை. பல்வேறு திரையுலக ஜாம்பவான்கள் கால்பதித்து சென்று வந்த ஒரு கலைக்கூடம்.

‘அவன்தான் மனிதன்’ படத்தில் சிவாஜி வீட்டுக்கு ‘ஆனந்த பவனம்’ என்று பெயர் வைத்திருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே சிவாஜி கணேசனின் ஆனந்த பவனம் அன்னை இல்லம்தான்.

1950கள் தொடங்கி இன்று வரை தமிழ்த் திரையுலகினரால் மரியாதையோடு உச்சரிக்கப்பட்டு வரும் இந்த அன்னை இல்லத்தின் உபசரிப்பால் உருகிப் போயிருக்கிறார் அஜித்.

சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் அஜித்தின் ‘அசல்’ படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக அன்னை இல்லத்தில் நடந்து வருகிறது. அதனால் அங்கு சென்று அன்னை இல்லத்தாரின் அன்பு பிடியில் சிக்கிய அஜித், “அது அந்த இல்லத்தின் பாரம்பரியத்தை காட்டுகிறது” என்று நெகிழ்ந்துள்ளார்.

Comments (0)